Published : 23 Jun 2015 08:00 AM
Last Updated : 23 Jun 2015 08:00 AM

சென்னையில் அனல் காற்று

சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெப்பக் காற்று வீசியதால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாயினர்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வழக்கமாக நிலத்தில் காற்றின் அழுத்தம் குறையும்போது, கடலில் உள்ள ஈரப்பதமுள்ள காற்று நிலப்பகுதிக்கு வரும். இன்று (திங்கள்கிழமை) நிலப்பகுதியில் காற்றின் அழுத்தம் குறையாததால் கடல் காற்று நிலப்பகுதியில் நுழைய முடியவில்லை. இதனால் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதனால் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக பலத்த வெப்பக் காற்று வீசியது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் அதிகபட்சமாக 38.7 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 28.6 டிகிரி செல்சியஸும் வெயில் பதிவானது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 39.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. திருச்சியில் 37.4, மதுரையில் 37, கோவையில் 31.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x