Published : 17 Jun 2015 07:49 AM
Last Updated : 17 Jun 2015 07:49 AM

மேகேதாட்டில் அணை கட்டுவது தொடர்பான தகவல் வரவில்லை: மத்திய அமைச்சர் தகவல்

கர்நாடக அரசு மேகேதாட்டில் அணை கட்டுவது தொடர்பான தகவல் மத்திய அரசுக்கு வரவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நடக்கும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று வந்தார்.

சென்னை விமான நிலையத் தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் சுமத்தும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதை சுஸ்மா ஸ்வராஜ் மறுத்திருக்கிறார். பாஜக ஓராண்டு ஆட்சியில் எவ்விதமான ஊழலும் நடைபெற வில்லை. இதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கர்நாடக அரசு மேகேதாட்டு அணை உட்பட காவிரியில் 4 தடுப்பணைகளை கட்ட இருப்பது பற்றி மத்திய அரசுக்கு எவ்விதமான தகவலும் வரவில்லை. எந்த அணையை கட்டுவதாக இருந்தாலும் முன்னதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும். கர்நாடக அரசிடம் இருந்து அனுமதி கேட்டு எந்த கோப்பும் வர வில்லை யோகாசனத்தில் பல முறைகள் உள்ளன யோகாசனம் உடலுக்கும், மனதுக்கு தெளிவை ஏற்படுத்தும் என்ற அறிவுரையைத்தான் மக்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x