Published : 06 Jun 2015 08:47 AM
Last Updated : 06 Jun 2015 08:47 AM
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள கோயிலில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் போன்ற வடிவில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் மாணிக்கம் தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றைக் கட்டியுள் ளார். இந்த கோயிலில் இடது மற்றும் வலது புறங்களில் எல்லைச் சாமிகள் வைப்பதுபோல 2 குதிரை சிலைகளை வைத்துள்ளார். இந்த குதிரைகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள சிலை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவத்தைப் போலவே உள்ளது. சிலையில் உள்ள சீருடையும் விடுதலைப் புலிகளின் சீருடை போலவே உள்ளது. சிலையின் தொப்பிகூட பிரபாகரன் அணிவதுபோலவே உள்ளது.
கிராமக் கோயில்களில் போலீஸ்காரர், ராணுவத் தினர்போல சிலைகள் அமைக்கப் படுவது வழக்கம்தான் என்றாலும் இச்சிலை அச்சு அசலாக பிரபாகரன் சிலைபோலவே இருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT