Published : 10 Jun 2015 07:32 AM
Last Updated : 10 Jun 2015 07:32 AM

மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த முயற்சி: சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்

மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 75 ஆக உயர்த்த முயல்வது கண்டிக்கத்தக்கது என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரி களில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக உள்ளது. ஆனால் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் அரசு மருத் துவக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படுகின்றனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 70 வயது வரை பணியாற்றுகின்றனர். இந்நிலை யில் மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 75 ஆக உயர்த்த இந்திய மருத்துவக் கழகம் முயற்சி செய்து வருகிறது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கழகத்தின் (தமிழக கிளை) துணைத் தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறும்போது, “ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 75 ஆக மாற்றுவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஆசிரியர்களின் பற்றாக்குறை இருக்காது. திறமையான ஆசிரி யர்கள் மருத்துவ சேவையை தொடர இது வழிவகுக்கும்” என்றார்.

இதுபற்றி சமூக சமத்துவத் துக்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 75 ஆக உயர்த்திட இந்திய மருத்துவக் கழகம் முயன்று வருவது கண்டிக்கத்தக்கது. இதனால் மருத்துவக் கல்வியின் தரம் பாதிக்கப்படும். முதுமையினால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளால் ஆசிரியர்களின் செயல்பாடு பாதிக் கும். எனவே இந்த முயற் சியை கைவிடவேண்டும். பேரா சிரியர்கள் பற்றாக்குறைக்கான காரணத்தை கண்டுபிடித்து, அதை போக்குவது குறித்து இந்திய மருத்துவக் கழகமும், மத்திய மற்றும் மாநில அரசுகளும் சிந்திக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x