Published : 01 Jun 2015 07:44 AM
Last Updated : 01 Jun 2015 07:44 AM

கள்ளநோட்டு வைத்திருந்த 2 பேர் கைது

மறைமலைநகரில் கள்ளநோட்டு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை யில் நேற்று காலை டீ குடித் துள்ளனர்.

பின்னர் ரூ.500 நோட்டை டீக்கடைக்காரரிடம் கொடுத்துள் ளனர். அதை பரிசோதித்த கடைக் காரர், அவர்கள் கொடுத்த ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்பதை தெரிந்து கொண்டு, அவர்களை பிடித்து மறைமலைநகர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுக்லா பிஸ்வாஸ், ஜனஸ் மிஸ்ரா என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x