Published : 02 Jun 2015 07:55 AM
Last Updated : 02 Jun 2015 07:55 AM
ஆம்பூரை அடுத்துள்ள பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாமக பிரமுகர் சின்னபையன். செம்மரம் கடத்தல் தொழிலில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் கடந்த 26-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆம்பூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், சின்னபையனை மிரட்டி வேலூர் கலால் டிஎஸ்பி தங்க வேலு 7 டன் செம்மரக் கட்டை களை கடத்திச் சென்றதும், அவருக் கும் செம்மர கடத்தல் கும்பலுக் கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவமே சின்னபையன் கொலைக்கு காரண மாக இருந்தது உறுதியானது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், 3.5 டன் செம்மரம், ரூ.32 லட்சம் பணம் மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நாகேந்திரன், அவரது மனைவி ஜோதிலட்சுமி கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் வழக்கில் டிஎஸ்பி தங்கவேலு 3-ம் நபராக சேர்க்கப்பட்டார். அவரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
செம்மரக் கடத்தல் வழக்கில் டிஎஸ்பி தங்கவேலு பெயர் இடம்பெற்றுள்ளதால், அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாரி பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரை கடிதம் உள்துறை செயலாளருக்கு அனுப்பப்பட் டுள்ளது. மேலும் டிஎஸ்பி தங்க வேலுக்கு உதவியாக இருந்த 4 போலீஸார் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT