Published : 03 Jun 2015 06:52 PM
Last Updated : 03 Jun 2015 06:52 PM

ஜூன் மாத இறுதிக்குள் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவு

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ, எம்டெக், எம்பிளான் இடங்களை நிரப்பும் வகையில் கடந்த மே 16,17-ம் தேதிகளில் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய இந்த பொது நுழைவுத் தேர்வை தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர்.

தேர்வு முடிவு குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் ஜி.நாகராஜனிடம் கேட்டபோது, “மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x