Published : 06 Jun 2015 08:33 AM
Last Updated : 06 Jun 2015 08:33 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் 3-ம் கட்ட இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் வரும் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடை பெறவுள்ளது.
காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரனஜன்னி, தட்டம்மை, நிமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கும் வகையில், 3-ம் கட்ட இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
211 மையங்கள்
மாவட்டத்தில் உள்ள தடுப்பு மருந்து மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவற்றில், 169 நிரந்தர மையங்கள் மற்றும் 42 நடமாடும் மையங்கள் என 211 மையங்களில் நிகழவுள்ள இந்த முகாம், நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.
இந்த முகாமில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, கக்குவான், தட்டம்மை உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படாமல் விடுப்பட்ட 2 வயதுக்கு உட்பட்ட 477 குழந்தைகள் மற்றும் 57 கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், இடம்பெயர்ந்து வாழும் தொழிலா ளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி போடப்படும்.
இந்த முகாம் பணிகளில் 555-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார் வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தடுப்பூசி முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT