Published : 26 Jun 2015 10:04 AM
Last Updated : 26 Jun 2015 10:04 AM

சென்னையில் 39.2 டிகிரி வெயில்

தமிழகத்தின் மேற்கு மாவட்டங் களில் கன மழை பெய்து வந்தாலும் சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் எப்போதும் போல் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்திருந்தது. நீலகிரி மாவட்டம் தேவலாவில் 10 செ.மீ, கோவை மாவட்டம் சின்னகல்லார், நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 9 செ.மீ, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேனி மாவட்டம் பெரியாரில் 5 செ.மீ மழை பெய்திருந்தது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x