Published : 02 Jun 2015 06:01 PM
Last Updated : 02 Jun 2015 06:01 PM

காஞ்சிபுரம் ஓரிகையில் சங்கர நேத்ராலயாவின் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்

சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை வரும் ஜூன் 6-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமை நடத்துகிறது. ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் முற்றிலும் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சங்கர நேத்ராலயா, SSSM ட்ரஸ்ட், KUEHNE + NAGEL இணைந்து நடத்தும் இந்த முகாம், ஸ்ரீமஹா ஸ்வாமிகள் மணிமண்டபம், ஓரிகை, காஞ்சிபுரத்தில் நடக்கிறது. பரிசோதனையில் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஜூன் 9-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை அறுவை சிகிச்சை செய்யப்படும்.

அறுவை சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ஆபரேஷன், லென்ஸ் கண்ணாடி மற்றும் மருந்து என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தையல் இல்லாத முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவுக்கு 9952945758, 9500197769, 044-6727446 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x