Published : 10 Jun 2015 07:29 AM
Last Updated : 10 Jun 2015 07:29 AM

திருநங்கைகள் மீது போலீஸார் தடியடி

சென்னை தரமணி டைடல் பார்க் அருகே நேற்று முன்தினம் இரவில் கண்ணகி நகரை சேர்ந்த பல திருநங்கைகள் ஒன்றாக இருந்தனர். அப்போது அங்கு வந்த கோட்டூர்புரம் போலீஸார் அவர்களை கலைந்துபோக கூறினர். இதில் போலீஸாருக்கும் திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த போலீஸார் திருநங்கைகள் மீது தடியடி நடத்தினர். இதில் வனஸ்ரீ(20) என்ற திருநங்கையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

மேலும், வெண்ணிலா(22), மாயா(23), கிருத்திகா(26) உட்பட 6 திருநங்கைகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் திருநங்கைகள் புகார் கொடுத்தனர். ஆனால் புகாரை வாங்க போலீஸார் மறுத்து விட்ட னர். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தி னர். திருநங்கைகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்துபோக செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x