Published : 02 Jun 2015 07:29 AM
Last Updated : 02 Jun 2015 07:29 AM
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் 5 பேர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 6 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் நேற்று வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார் ஆட்சியர்.
இந்த குறைதீர் கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் 5 பேர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 6 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் (பொறுப்பு) டி.ஆர். மல்லிகா, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT