ஆர்.கே.நகர் தொகுதி வேட்பு மனு தாக்கல் நிறைவு

ஆர்.கே.நகர் தொகுதி வேட்பு மனு தாக்கல் நிறைவு
Updated on
1 min read

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்தது.

கடந்த 3-ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.

மனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் 13-ம் தேதி ஆகும். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. ஜூன் 30ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அதிமுக சார்பில் ஜெயலலிதாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரனும், சுயேட்சை வேட்பாளராக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in