Published : 24 Jun 2015 07:32 AM
Last Updated : 24 Jun 2015 07:32 AM

டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட அரசு உத்தரவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 25-ம் தேதி மாலை 5 மணி முதல் 27-ம் தேதி வரையிலும், அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 30-ம் தேதி அன்றும் (மொத்தம் 4 நாட்கள்) மூடப்படும். இதற்கான உத்தரவை தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x