Published : 30 Jun 2015 07:35 AM
Last Updated : 30 Jun 2015 07:35 AM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர் நாய்க்கென புதிய அடைப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் அலுவலகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
அறிஞர் அண்ணா உயிரியல் பூங் காவில் 2 ஆண் மற்றும் 1 பெண் என மொத்தம் 3 நீர் நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நீர் நாய்கள் ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும் இயல்பை உடையவை. எனவே நீர் நாய்களுக்கிடையே மோதலை தவிர்க்கும் பொருட்டும், இனவிருத் திக்கான ஒரு குடும்பத்தை உருவாக் கும் பொருட்டும், ஒரு ஆண் நீர் நாய்க்கான புதிய அடைப்பிடம் அமைக்கப்பட்டது. இந்த அடைப் பிடத்தை பார்வையிட பார்வை யாளர்கள் சனிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த புதிய அடைப்பிடத்தில் நீர்நாய்களின் இயற்கையான வாழ் விடம் போன்று ஒரு நீர்த் தொட்டி, தொட்டியிலிருந்து மேலே ஏறி வருவதற்கு சிறப்பு படிக்கட்டு, பதுங்குவதற்கு 2 குகைகள், புரண்டு விளையாட மண் தரை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பார்வை யாளர்கள் 3 திசைகளில் இருந்து பார்க்கும் விதமாக கண்ணாடி யிலான தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள் ளது. இதன் மூலம் நீர் நாயின் அனைத்து நகர்வுகளையும் பார்வை யாளர்கள் எளிதாக கண்டுகளிக்க முடியும். இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT