Published : 05 May 2015 07:31 AM
Last Updated : 05 May 2015 07:31 AM

செய்யூரில் சிலிக்கா மண் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

செய்யூர் அடுத்த நைனார் குப்பம் கிராமப் பகுதியில் கனிம வளத் துறையினர், நிலத்தடியில் இருந்து சிலிக்கா மண் எடுப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். எனினும், அவ்வா றான திட்டம் ஏதும் இல்லை என மாவட்ட கனிம வளத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நைனார் குப்பம் கிராமவாசிகள் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அடுத்த முதலியார்குப்பம் பகுதியில் கனிமவளத் துறையின் மூலம், நிலத்தடியில் உள்ள சிலிக்கா மண் அள்ளப்படுகிறது. இந்நிலையில், கனிம வளத் துறை யினர் நைனார்குப்பம் கிராமத் திலும் சிலிக்கா மண் எடுப்ப தற்காக, அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கற்கள் நட்டு வருகின்றனர்.

சிலிக்கா மண் எடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலப் பகுதியை சுற்றி விவசாய நிலம் அமைந்துள்ளது. பல அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி சிலிக்கா மண் எடுத்தால் நிலத் தடி நீர்வளம் முற்றிலும் பாதிக் கப்படும். ஏற்கெனவே சிலிக்கா மண் அள்ளப்பட்ட முதலியார் குப்பம் பகுதியில் இந்த நிலை தான் ஏற்பட்டுள்ளது. அதனால், நைனார்குப்பம் பகுதியில் சிலிக்கா மண் எடுக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் துள்ளோம் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கனிம வளத் துறை துணை இயக்குநர் மோகன்தாஸ் கூறியதாவது: சிலிக்கா மண் எடுக்க செய்யூர் அடுத்த முதலி யார்குப்பம் பகுதியில் மட்டுமே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டது. வேறு எந்த பகுதியிலும் சிலிக்கா மண் எடுக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், நைனார் குப்பம் பகுதியில் சிலிக்கா மண் எடுக்க, அரசு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். நைனார் குப்பம் பகுதியில் இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு வருவாய்த் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x