வணிகர் சங்க நிர்வாகியை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு

வணிகர் சங்க நிர்வாகியை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

செங்கல்பட்டில் வணிகர் சங்க நிர்வாகியை மிரட்டியதுடன் பணம் பறித்த புகார் தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. வணிகர் சங்க நிர்வாகி. சில தினங்களுக்கு முன்பு இவரை 3 பேர் கொண்ட கும்பல் மிரட்டி ரூ.2 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றது. இது தொடர்பாக சுப்பிரமணி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் விசாரித்த போலீஸார் ஒழலூரைச் சேர்ந்த ராயப்பன், தினேஷ், செங்கல்பட்டைச் சேர்ந்த மதன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் பிடித்தனர்.

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து போலீஸ் தரப்பில் கூறிய தாவது:

கடந்த 2004-ல் சுப்பிரமணி அளித்த புகார் காரணமாக செங்கல் பட்டு தாலுகா காவல்நிலைய ஆய்வாளராக இருந்த தாம்சனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இதனால் ஆத்திர மடைந்த அவர் சுப்பிரமணியை மிரட்ட மேற்கண்ட 3 நபர்களை அனுப்பியுள்ளார். அவர்கள் மிரட்டியதுடன் பணத்தையும் பறித்துச் சென்றது தெரியவந்தது. அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களை கைது செய்த போலீஸார், சென்னையில் தற்போது காவல் ஆய்வாளராக பணி செய்து வரும் தாம்சன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in