Published : 12 May 2015 07:55 AM
Last Updated : 12 May 2015 07:55 AM

தமிழகத்தில் முதல்முறையாக தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் தொடக்கம்: அரசு அனுமதியுடன் பதநீர் தயாரிப்பு

தமிழகத்தில் முதல்முறையாக புதுக் கோட்டை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் விவசாயிகளைக் கொண்டு தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி யுடன் பதநீர் எடுக்கும் தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் தென்னை விவசாயிகளைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், அரசு அனுமதியுடன் பதநீர் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் செல்லதுரை கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 9,200 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு தென்னை மரத்தில் இருந்து ஆண்டுக்கு தேங்காய் மூலம் சராசரியாக ரூ.1,000 மட்டுமே கிடைக்கிறது. மரத்தைப் பராமரிக்கக் கூட இந்த வருவாய் போதுமானதாக இல்லாததால், பல விவசாயிகள் தென்னை மரங்களை அழிக்கும் அவலநிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

தென்னை வாரியத்தின் பரிந்துரைபடி, தேங்காய் விளைச்சலை அதிகரிக்கவும், மரத்தில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், பதநீர் எடுத்து, விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வந்தோம். இதன் மூலம் ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.14 ஆயிரம் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

தற்போது, அறந்தாங்கியைச் சேர்ந்த விவசாயிகள் பதநீர் எடுக்க அரசின் அனுமதியைப் பெற்றுள்ளனர். சில நாட்களில் பதநீர் விற்பனை தொடங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x