Published : 09 May 2015 07:48 AM
Last Updated : 09 May 2015 07:48 AM
சென்னை கம்பன் கழகம், பாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய ‘காப்பியக் களஞ்சியம்’ என்னும் நிகழ்ச்சி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று நடை பெற்றது.
இவ்விழாவில் கம்பன் கழகத் தலைவர் இராம.வீரப்பன் பேராசிரியர் ஏ.கீதாவுக்கு ‘தமிழ் நிதி’ விருதினை வழங்கினார். நிகழ்ச்சியில் பா.பானுமதி, ‘வளையாபதி காப்பியம்’ குறித்தும், இளைஞர் அரங்கில் த. திருமாறன் ‘கம்பனின் கட்டளைகள்’ எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றினர். பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏ.எம்.சுவாமிநாதன், கம்பன் கழகப் பொருளாளர் புதுகை மூ.தருமராசன், கவிஞர் மலர்மகன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT