Published : 10 May 2015 08:00 AM
Last Updated : 10 May 2015 08:00 AM
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கண்டித்து நாடு தழுவிய அளவில் வரும் 14-ம் தேதி மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 200 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘மத்திய அரசு பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கண்டித்து தேசிய அளவில் வரும் 14-ம் தேதி மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 200 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி வருகிறது.
குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன் பொதுப்பணி துறை ஒப்பந்ததாரர்கள், பொது பணித்துறையில் ஒவ்வொரு பணிக்கும் 45 சதவீத கமிஷன் தொகை கேட்கின்றனர். இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து அந்த துறையின் அமைச்சரான தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் வெளிப்படையான பதில் அளிக்க வேண்டும். இது போன்று பணிகள் நடைபெறுவதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவர்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார், கமிஷன் தொகை யாருக்கு செல்கிறது என தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்துள்ளது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT