Published : 13 May 2015 05:50 PM
Last Updated : 13 May 2015 05:50 PM

பரமக்குடியில் மின் வாரிய உதவி பொறியாளர் தற்கொலை முயற்சி

பரமக்குடியில் மின் வாரிய உதவி பொறியாளர் கார்த்திக் கணேஷ் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

கார்த்திக் கணேஷ் காவனூர் மின் நிலையத்தில் மின் வாரிய உதவி பொறியாளராக பணிபுரிகிறார். உயர் அதிகாரிகள் பணிச்சுமை கொடுப்பதாக தொழிற்சங்கத்தினருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், தூக்க மாத்திரை சாப்பிட்ட கார்த்திக் கணேஷ் அலுவலகத்தில் மயங்கி விழுந்தார். இதனால் பரமக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தற்போது கார்த்திக் கணேஷ் பரமக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x