Published : 11 May 2015 08:32 AM
Last Updated : 11 May 2015 08:32 AM

தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் பள்ளி வாகனங்களில் இன்று முதல் ஆய்வு: பாதுகாப்பு குறைபாடு இருந்தால் எப்.சி கிடையாது

தமிழகத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு தொடர் பான ஆய்வு பணிகள் இன்று முதல் தொடங்கப்படுகின்றன. சென்னை யில் திருவான்மியூர் ஆர்டிஓ எல்லைக் குட்பட்ட 32 பள்ளிகளுக்கான வாக னங்களில் ஆய்வுகள் கொட்டிவாக் கத்தில் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கா மல் இருக்க முன்கூட்டியே பாது காப்பு அம்சங்கள் குறித்து நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்றும், சில இடங் களில் பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டும் ஆண்டு தோறும் முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பள்ளி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். அதன்படி, பள்ளி வாகனங்களில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு ஆய்வு நடத்தி, அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டுமென ஆர்டிஓக்களுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டது. மேலும், ஆர்டிஓக்களுக்கு தேதி வாரியாக காலஅட்டவணை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவான்மியூர் ஆர்டிஓக்கு உட்பட்ட 32 பள்ளிகளுக் கான வாகனங்களில் ஆய்வு கொட்டி வாக்கத்தில் இன்று நடக்கவுள்ளது. இதேபோல், வரும் 14-ம் தேதி கே.கே.நகர் ஆர்டிஓவுக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களிலும், வரும் 15-ம் தேதி அண்ணாநகர் ஆர்டிஓவுக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களிலும் ஆய்வு பணிகள் நடக்கவுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பள்ளி வாகனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தும் பணி தொடங்குகிறது. ஆய்வு பணிகளை முடித்து அறிக்கையாக தயாரித்து அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் தகுதி சான்று (எப்.சி.) அளிக்கப்படமாட்டாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x