Published : 02 May 2015 08:56 AM
Last Updated : 02 May 2015 08:56 AM

ஸ்வர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்தால் தொழிலாளர் உழைப்பை தனியார் சுரண்டுவது தடுக்கப்பட்டுள்ளது: மேயர் சைதை துரைசாமி பெருமிதம்

ஸ்வர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்தால் தொழிலாளர் உழைப்பை தனியார் சுரண்டுவது தடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்து உள்ளார்.

சென்னை மாநகராட்சியின் கூட் டத்தில் கேள்வி நேரத்தின்போது மாமன்ற உறுப்பினர்களின் கேள்வி களுக்கு மேயர் சைதை துரைசாமி பதிலளித்தார்.

அப்போது ஸ்வர்ண ஜெயந்தி திட்டம் தொடர்பாக மேயர் கூறியதாவது:

ஸ்வர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் 3,800 பணியாளர்கள், துப்புரவு பணியில் 5,650 பேர், மலேரியா நோய் ஒழிப்புப் பணியில் 1,148 பேர் என மொத்தம் 10,598 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.295 வீதம் ஊதியம் நேரடியாக அவர்கள் சார்ந்துள்ள குழுக்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் இடைத்தரகர்கள், முறைகேடு கள் இல்லை.

முன்பு தனியார் ஒப்பந்த தாரர்கள் மூலம் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. ஊதியமும் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப் பட்டுவந்தது. அப்போது மாநக ராட்சி வழங்கும் ரூ.295-ல் ரூ.230 வரை மட்டுமே பணியாளர்களுக்கு சென்றது. இதனால் ஒப்பந்த தாரர்கள் லாபம் அடைந்தனர்.

தொழிலாளர்களின் உழைப்பை தனியார் சுரண்டுவதை தடுக் கவே ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முறைகேடுகள் நடப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட குழுவின் தலைவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x