Published : 05 May 2014 08:57 AM
Last Updated : 05 May 2014 08:57 AM

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மே 9 முதல் விண்ணப்பம் விநியோகம்

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கான பொறியியல் மற்றும் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மே 9-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண் ணப்ப படிவம் மே 9-ம் தேதி முதலும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இளங்கலைப் பட்டப் படிப்புக்கான விண்ணப் பங்கள் மே12-ம் தேதி முதல் 31-ம் தேதிவரையிலும் விநி யோகிக்கப்படவுள்ளன. விண் ணப்பத்தைப் பெற்று, அத னைப் பூர்த்தி செய்து ஜூன் 2-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பல்கலைக்கழக அலுவலக வளாகத்திலும், அனைத்து தொலைதூரக் கல்வி மையங் களிலும் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும். பொறியியல் மற்றும் இளங்கலை வேளாண்மை, தோட்டக் கலை ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.400-க்கு வழங்கப்படும். அஞ் சல் வழியாகப் பெறுவோர் அஞ்சல் கட்டணமாகக் கூடுத லாக ரூ.50 செலுத்தி, சென்னை யில் மாற்றத்தக்க வங்கி வரை வோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல் கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற பெயரில் எடுத்து பதி வாளர், அண்ணாமலைப் பல் கலைக்கழகம், அண்ணாமலை நகர்-608002, சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப் பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படை யிலும், அரசு விதிமுறை கள் இடஒதுக்கீடு முறையில் நடைபெறும். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப் படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x