Published : 29 May 2015 12:00 PM
Last Updated : 29 May 2015 12:00 PM
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களில் சந்திப்பில் அவர் கூறும்போது, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படமாட்டோம். தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என தமிழக தேர்தல் கமிஷன் உத்தரவாதம் அளித்தால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்போம்.
ஜூன் 3-ல் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு எட்டப்படும்" என்றார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்பதால் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்.கே.நகர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தமிழக பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் கமிஷன் உத்தரவாதத்தைப் பொறுத்தே தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்போம் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT