Published : 30 May 2015 11:45 AM
Last Updated : 30 May 2015 11:45 AM
ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை விதித்து எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை சரியானதே என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும்போது, "ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை விதித்து எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை சரியானதே" என்றார்.
மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐஐடியில் இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம் என்ற மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒழுங்கு நடவடிக்கை சரியானது எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT