Published : 29 May 2015 09:08 AM
Last Updated : 29 May 2015 09:08 AM
திருவள்ளூர் அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர் புடைய நபரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே உள்ள மணவாளநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட் டனர். அப்போது அவ்வழியே வந்த ஒருவரை மறித்து, விசாரணை நடத்தினர். அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர்.
இதில், அந்த நபர், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த லூர்துநாதன் (56) என்பதும், அரக்கோணம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. 2013-ம் ஆண்டு மணவாளநகர் - கபிலன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த திருட்டு சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. லூர்துநாதனை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து எட்டரை பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT