Published : 03 May 2015 09:32 AM
Last Updated : 03 May 2015 09:32 AM

சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள்

கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் பற்றிய விவரம்:

¬ திருநெல்வேலி – எழும்பூர் சிறப்பு ரயில் (எண்: 06021 திருச்சி, விழுப்புரம் வழி) திருநெல்வேலியில் இருந்து மே 8-ம் தேதி இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்துசேரும்.

¬ எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06022 மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழி) எழும்பூரில் இருந்து மே 9-ம் தேதி இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.

¬ திருநெல்வேலி – எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06023 தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழி) திருநெல்வேலியில் இருந்து மே 19-ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை வந்துசேரும்.

¬ எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06024 மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழி) சென்னையில் மே 20-ம் தேதி இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.

¬ திருநெல்வேலி – எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06025 திருச்சி, விழுப்புரம் வழி) திருநெல்வேலியில் இருந்து மே 14-ம் தேதி இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை வந்துசேரும்.

¬ எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06026 விழுப்புரம், திருச்சி வழி) சென்னையில் இருந்து மே 15-ம் தேதி இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.

¬ திருநெல்வேலி – எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06027 திருச்சி, விழுப்புரம் வழி) திருநெல்வேலியில் இருந்து மே 24-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை வந்துசேரும்.

¬ எழும்பூர் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06028 விழுப்புரம், திருச்சி வழி) சென்னையில் இருந்து மே 25-ம் தேதி மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.

¬ நாகர்கோவில் – எழும்பூர் சிறப்பு ரயில் (எண்: 06029 திருச்சி, விழுப்புரம் வழி) நாகர்கோவிலில் இருந்து மே 17-ம் தேதி மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை வந்துசேரும்.

¬ எழும்பூர் – நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06030 விழுப்புரம், திருச்சி வழி) சென்னையில் இருந்து மே 18-ம் தேதி மாலை 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் போய்ச்சேரும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x