சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திருமாவளவன் புகார்

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திருமாவளவன் புகார்
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதற்கு தனது தனிச் செயலாளர் வெற்றிச்செல்வன் கொலையே சான்று என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன்.

நேற்று அரியலூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை. எனக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு வெற்றிச்செல்வன் கொலை செய்யப்பட்டிருப்பதே சான்று. அவரது கொலைக்கு காரணமான சமூக விரோதிகளை காவல் துறையினர் விரைந்து கைது செய்யவேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in