Published : 13 May 2015 07:38 AM
Last Updated : 13 May 2015 07:38 AM

அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஐஜி, மண்டல மேலாளர் ஆய்வு

அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப் பாதை அமைப் பது மற்றும் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவது தொடர்பாக, ரயில்வே ஐஜி சீமா அகர்வால் மற்றும் சென்னை மண்டல ரயில்வே மேலாளர் அனுபவ் சர்மா ஆகி யோர் நேற்று ஆய்வு நடத்தினர்.

அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இந்த நிலையில், அங்கு ரயில்வே ஐஜி சீமா அகர்வால் மற்றும் சென்னை மண்டல ரயில்வே மேலாளர் அனுபவ் சர்மா ஆகி யோர் நேற்று ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது, சுரங்கப் பாதை அமைக்கும் பணி, ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைத் தல், நடைமேடைகளில் மின் விளக்குகள் அமைத்தல், பைக்கு கள் நிறுத்துமிடத்தை மேம்படுத் துதல் ஆகிய பணிகளை விரை வில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x