Published : 31 May 2015 08:52 AM
Last Updated : 31 May 2015 08:52 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொது நீர்நிலைகளை, பொதுமக்கள் 5 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்க்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்புவிவரம்: திருவள்ளூர் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் மீன் நுகர்வை அதிகரிக்கும் நோக்கில், தமிழக அரசின் மீன்வளத் துறை மூலம் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முகமை மூலம் மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை தொடர்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், மீன் வளர்ப்போருக்கு உரிய தொழில்நுட்ப ஆலோச னையும் வழங்கப் படுகிறது.
இதன்ஒரு பகுதியாக, மாவட் டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை ஆகிய பொது நீர்நிலைகளை பொதுமக்கள் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து மீன் வளர்க்கலாம்.
பொது நீர்நிலைகளை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்க்க விரும்புவோர், பொன்னேரியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை யில் கதவு எண் 11-ல் செயல்படும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையை அணுகலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT