தனியார் நிறுவன வளாகத்திலிருந்து சந்தன மரம் வெட்டிக் கடத்தல்

தனியார் நிறுவன வளாகத்திலிருந்து சந்தன மரம் வெட்டிக் கடத்தல்
Updated on
1 min read

கோவை தனியார் நிறுவன வளாகத்திலிருந்து சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்றனர்.

கோவை லட்சுமி மில் சந்திப்பு அருகே தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. அந்த வளாகத்தில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சுமார் 20 வயது, 10 வயது மதிக்கத்தக்க இரு மரங்கள் என மொத்தம் 3 மரங்கள் நேற்று அதிகாலையில் வெட்டப்பட்டுக் கிடந்தன. அதில், 20 வயதுடைய மரத்தின் சந்தனக் கட்டையைக் காணவில்லை. 10 வயது மதிக்கத்தக்க மரங்களின் கட்டைகள் மட்டும் அங்கேயே கிடந்தன.

இது குறித்து அந்த நிறுவனத்தின் சார்பில் ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளிக்கப்பட் டுள்ளது. போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, ‘அந்த நிறுவன வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு இரு காவலாளிகள் பணியில் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் மரங்கள் வெட்டுவதை கவனிக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெட்டப்பட்ட மூன்று மரங்களில் 2 மரங்களின் கட்டைகளை போட்டுவிட்டு, ஒரு மரத்தின் கட்டையை எடுத்துச் சென்றுள்ளனர். சுமார் 4 பேர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in