Published : 22 May 2015 07:51 AM
Last Updated : 22 May 2015 07:51 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸார் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும் புதூர் வந்திருந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அவரது 24-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக காங் கிரஸ் தலைமை அலுவலக மான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக் கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்துக்கு மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசர், மாநில ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத் தினர்.
அதைத் தொடர்ந்து சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்தனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அங்கு நடந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.
தமாகா சார்பில் அஞ்சலி
தமாகா சார்பில் சைதாப் பேட்டையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT