Published : 13 May 2015 07:48 AM
Last Updated : 13 May 2015 07:48 AM
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை அடுத்து ஆந்திரம், ஒடிசா மாநில முதல்வர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித் துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்ற ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சி தலைவர் திண்டிவனம் க.ராமமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இயல் இசை நாடக மன்றத் தலைவர் தேவா, பாடகி பி.சுசீலா, பாடகர் கே.ஜே.ஏசுதாஸ், இயக்குநர்கள் பி.வாசு, விக்ரமன் நடிகர் ஆனந்தராஜ், நடிகைகள் சவுகார் ஜானகி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT