Published : 17 May 2015 09:38 AM
Last Updated : 17 May 2015 09:38 AM

மாற்று சிந்தனை தரும் முகநூல் கருத்துகள்: மு.க.ஸ்டாலின் பெருமிதம் - 10 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் முகநூல் பக்கத்தை 10 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். முகநூல் கருத்துகள் தனக்கு மாற்று சிந்தனையைத் தருவதாக அவர் கூறியுள்ளார். தன்னை பின்பற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முகநூலில் ஸ்டாலின் நேற்று கூறியுள்ளதாவது:

இது இணையதள காலம். தகவல் தொடர்பில் சமூக வலைதளங்கள் அசாத்திய வேகத்தை ஏற்படுத்தி புரட்சி செய்திருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பிருந் ததைவிட, மேலும் எளிதாக உங் களை தொடர்புகொண்டு கருத்து களை பரிமாறிக் கொள்வதற்கு முகநூல் பக்கம் பெரிதும் உதவுகிறது.

10 லட்சம்

முகநூலில் என் எண்ணங்களை பகிர்வதோடு, நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள், ஆலோசனைகள், விமர்சனங்களை மிகவும் ஆர்வத் துடனும் அக்கறையுடனும் படிக் கிறேன். அந்த வகையில் முகநூல் பக்கம் வாயிலாக என்னைத் தொடர்பு கொள்வோரின் எண் ணிக்கை 10 லட்சத்தை எட்டி யுள்ளது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நம் மாநிலம் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஒரு பார்வையையும், மாற்று சிந்தனையையும் முகநூலில் வரும் கருத்துகள் எனக்கு தருகின்றன. தனியொருவனாக என்னால் சிறிதளவு செய்ய முடியும். ஆனால், நாம் இணைந்து செயல்பட்டால் விரும் பும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

கருத்துக்களுக்கு மதிப்பு

பல லட்சம் முகநூல் நண்பர்கள், கருத்துகளைத் தெரிவிப்பதால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்னால் பதில் போட முடியாமல் போயிருக்கலாம். ஆனால், உங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வருங்காலத் திலும் உங்கள் கருத்துகளை எதிர்பார்த்திருக்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x