Published : 08 May 2015 08:48 AM
Last Updated : 08 May 2015 08:48 AM
இந்தியில் மாநில அளவில் முதல் மற்றும் 2-ம் இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர் போரூர் பள்ளிகளின் மாணவிகள்.
பிளஸ் 2 தேர்வில், மொழி பாடமாக இந்தியைப் படித்து மாநில அளவில் முதல் மற்றும் 2-ம் இடங்களை பெற்றுள்ளனர் போரூரில் உள்ள சுவாமிஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மற்றும் செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
சுவாமிஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏ. ஜி. கீர்த்தி இந்தியில் 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
இதேபோன்று போரூர் பகுதியிலுள்ள செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். சுவாதி 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT