Published : 25 May 2015 10:50 AM
Last Updated : 25 May 2015 10:50 AM

வீட்டுக்குள் புகுந்து தந்தை, மகனை கத்தியால் குத்தி கொள்ளையடிக்க முயற்சி

பல்லாவரத்தில் தந்தை, மகனை தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்ட கொள்ளையரில் ஒருவர் சிக்கினார்.

சென்னை பல்லாவரம் பம்மல் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் புருசோத்தமன் (62). இவரது மகன் ஜெகதீசன் (32). நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிய புருசோத்தமன் அதிகாலை 4 மணியளவில் நடைபயிற்சிக்காக எழுந்தார். அப்போது, சத்தமில்லாமல் கதவை உடைத்து வீட்டில் நுழைந்திருந்த 3 மர்ம நபர்களை பார்த்து சத்தம் போட்டார். கொள்ளையர்கள் புருசோத்தமனை கத்தியால் குத்தினர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஜெகதீசன் ஓடி வந்தார். அவரையும் கொள்ளையர்கள் கத்தியால் குத்தினர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த பொது மக்கள் விரைந்து வந்தனர். அப்போது 3 கொள்ளையர்களும் தப்பி ஓடினர். பொதுமக்கள் விரட்டிச் சென்று ஒருவரை மட்டும் சுற்றி வளைத்து பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட கொள்ளையனுக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து சங்கர் நகர் போலீஸில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பதும் புறநகர் பகுதியில் வீடு புகுந்து திருடும் கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் வேறெங்கெல்லாம் கொள்ளையடித்தனர் என்பது குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x