Published : 16 May 2015 07:50 AM
Last Updated : 16 May 2015 07:50 AM
கே.கே. நகரில் இளைஞர் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளரை பணி யிடை நீக்கம் செய்யக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி புகார் அளித்துள்ளார்.
விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
சென்னை கே.கே. நகர் 80 அடி சாலையில் பைக்கில் வந்த 3 இளைஞர்களை கடந்த 9-ம் தேதி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சற்குணம் மற்றும் காவலர் மடக்கினர். அப்போது நிலைதடுமாறி தடுப்புக் கம்பியில் பைக் மோதியதில் செல்வம் என்ற இளைஞர் இறந்தார். படுகாயம் அடைந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வழக்குப் பதிவு இல்லை
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த 4 இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு இன்ஸ் பெக்டர் சற்குணத்தை தாக்கி விட்டனர். உள்நோக்கமின்றி இவ்வாறு செய்த 4 இளை ஞர்களையும் கே.கே. நகர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எந்த வழக்கும் பதிவு செய்யாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இளைஞர் உயிரிழப்புக்கு காரணமான இன்ஸ்பெக்டர் சற்குணம், காவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு புகாரில் தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT