

கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சிறு புழல்பேட்டை எலைட் மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளி மாணவர் யுவசாய்குமார், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தெலுங்கு மொழி பாடத்தில் 200-க்கு 197 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
இவரது மொத்த மதிப்பெண் 1,175. இதுகுறித்து யுவசாய்குமார் கூறும்போது, ‘சிறந்த இதய நோய் மருத்துவராக வேண்டும் என்பதே லட்சியம்’ என்றார்.