Published : 02 May 2015 08:39 AM
Last Updated : 02 May 2015 08:39 AM

சென்னை அமிர்தா பட்டமளிப்பு விழாவில் 140 பேருக்கு பட்டம்

சென்னை அமிர்தா கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

ஜிஆர்டி கிராண்ட்டேஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில் மலேசியாவின் ஓயுஎம் பல்கலைக்கழக தலைவர் டான் ஸ்ரீ அன்வர்அலி கலந்துகொண்டு 140 மாணவர்களுக்கு பட்டமளித்தார். சிறந்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், கேடயமும் வழங்கினார்.

இது தொடர்பாக அந்நிறுவனம் அளித்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவருமே 2 மாதங்களுக்கு முன்பே பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் பணி யாற்றத் தொடங்கிவிட்டனர். சென்னை அமிர்தாவில் முதல் ஆண்டில் சென்னையிலும், 2-வது ஆண்டில் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் படிக்கலாம். இதன்மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் வெளி நாட்டில் படிக்க முடியும். படிக்கும் போதே ரூ.4 முதல் 10 ஆயிரம் வரை பகுதி நேரத்தில் பணியாற்றி ஊதியம் ஈட்ட முடியும்.

இந்த கல்வி நிலையத்தில் நவீன வகுப்பறைகள், சர்வதேச நட்சத்திர ஹோட்டல்களைப் போன்ற நவீன சாதனங்களைக் கொண்ட சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை கொண்ட பயிற்சிக் கூடங்கள் உள்ளன. இந்தியாவின் சிறந்த 5 ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை அமிர்தா விளங்குகிறது.

மாணவர்கள் பல்வேறு நாடுகளில் சிறப்பான பணிகளில் சேருவது மட்டுமல்லாமல், சுய தொழிலிலும் ஈடுபடச் செய்யும் நோக்குடன் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தகுதி வாய்ந்த மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x