Published : 13 May 2015 08:02 AM
Last Updated : 13 May 2015 08:02 AM

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான இடங்களை ஆய்வு செய்த மத்திய குழுவினர் தங்க ளுடைய அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.

தமிழகம், ஜம்மு- காஷ்மீர், இமாசலப் பிரதேசம், பஞ்சாப், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (எய்ம்ஸ் மருத்துவமனை) அமைக்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதற்கான இடங் களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் 22-ம் தேதி தமிழகம் வந்தனர்.

தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக் கோட்டை மாவட்டம் புதுக் கோட்டை நகரம், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சி புரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டு டெல்லி சென்றனர்.

இந்த ஆய்வின்போது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளர் தாரித்ரி பாண்டா கூறும்போது, “தமிழகத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை செலவாகும். 5 இடங்களைப் பார்வையிட்டோம். எங்களுடைய முதல் கட்ட ஆய்வு அறிக்கையை 2 வாரங்களில் மத்திய அரசிடம் கொடுப்போம். அதன்பின் 4 முதல் 6 மாதங் களில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைப்பதற்கான பணி கள் தொடங்கப்படும்” என்றார்.

அதன்படி குழுவினர் 2 நாட்களுக்கு முன்பு தங்களுடைய முதல் கட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதை முடிவு செய்ய உள்ளனர்.

இடம் முடிவாகவில்லை

இந்நிலையில் மதுரை மாவட் டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள தாக தகவல்கள் நேற்று வெளி யாகின. இது தொடர்பாக சுகா தாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும் போது, “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது. தமிழகத்தில் 5 இடங்களை ஆய்வு செய்த குழுவினர் தங்களுடைய அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x