Published : 02 May 2015 10:11 AM
Last Updated : 02 May 2015 10:11 AM
அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத தொழில்நுட்ப பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) கலந்தாய்வு முறையில் இடமாறுதல் அளிக்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ளன. சம்பந்தப்பட்ட கல்லூரி களின் முதல்வர்கள் பணியாளர் களிடம் இருந்து விண்ணப்பங் களைப் பெற்று உரிய குறிப்புரை மற்றும் பரிந்துரைகளுடன் மே மாதம் 11-ம் தேதிக்குள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.
இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் பிரவீண்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT