Published : 30 May 2015 08:16 AM
Last Updated : 30 May 2015 08:16 AM
சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில் தற்போது 15 சதவீத நீர் இருப்பே உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்துள்ள போதிலும் சென்னையின் நீர் இருப்பை அதிகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சென்னைக்கு நீராதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 15.76 சதவீத நீர் இருப்பு மட்டுமே உள்ளது. எனவே, வட கிழக்கு பருவ மழை தொடங்கும் வரை சென்னையின் குடிநீர் தேவையை எப்படி சமாளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னைக்கு நீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தற்போது மொத்தமாக 1.74 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் இங்கு 3.2 டி.எம்.சி நீர் இருந்தது. 0.88 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரி தற்போது வறண்ட நிலையில் உள்ளது. பூண்டி நீர் தேக்கத்தில் 0.10 டி.எம்.சி நீரும், புழல் ஏரியில் 1.04 டி.எம்.சி நீரும் மட்டுமே உள்ளது. சென்னைக்கான நீர்த் தேக்கங்களில் செம்பரம்பாக்கம் ஏரிதான் அதிக கொள்ளளவு கொண்டது. 3.64 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 0.59 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது.
சென்னையில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை 5.9 செ.மீ மழை பெய்துள்ளது.என்றாலும் சென்னைக் கான நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “தற்போதுள்ள நீர் இருப்பை வைத்து ஜூலை மாதம் வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் சமாளிக்கலாம். மேற் கொண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க மாற்று ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. வீராணம் ஏரி மூலம் 380 மில்லியன் லிட்டர் நீர் தினமும் வருதற்கு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT