Published : 12 May 2015 07:27 AM
Last Updated : 12 May 2015 07:27 AM

அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

சென்னை அரசு பொது மருத்துவ மனையில் உலக செவிலியர்கள் தினம் கொண்டாட்டம் நடைபெற் றது.

உலக செவிலியர் தினம் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் “அவசர அறுவைச் சிகிச்சையில் உயிர் காத்தல் - செவிலியர்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா தலைமையில் நடந்த கருத்தரங்கில் இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியர்கள் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன், டாக்டர் டி.கண்ணன் உட்பட பல்வேறு மருத்துவத்துறை தலைவர்கள், “சரியான நேரத்தில் நோயைக் கண்டுபிடித்தல், முதலுதவி அளித் தல், சரியான துறைக்கு சிகிச்சை அளிக்க அனுப்புதல் என செவிலியர்கள் தாயுள்ளத்தோடு சேவை செய்கின்றனர்” என்று பேசினர்.

இந்த கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x