எஸ்.ஐ. பணியிடங்களுக்கு 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

எஸ்.ஐ. பணியிடங்களுக்கு 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்.

தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் 1,078 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விண்ணப்பித்த அனைவரும் எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் 26 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 135 மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடந்த தேர்வை சுமார் ஒன்றரை லட்சம் பேர் எழுதினர்.

ஏற்கெனவே காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்று (24-ம் தேதி) தனியாக தேர்வு நடக்கிறது.

அனைத்துத் தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வருபவர்களுக்கு வசதியாக, தேர்வு மையங்கள் வழியாக செல்லும் பேருந்துகளில் அறிவிப்பு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந் தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in