Published : 24 May 2015 08:56 AM
Last Updated : 24 May 2015 08:56 AM

முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றுள்ளதற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று காலை பதவியேற்றார். இதையடுத்து, புதுச்சேரியில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறும்போது, “தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி அரசு பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து முதல் நாளிலேயே இலவச பாடபுத்த கங்கள், சீருடைகள் வழங்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உதவித் தொகை ரூ.3,000 ஓரிரு தினங்களில் வழங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x