Published : 10 May 2015 07:48 AM
Last Updated : 10 May 2015 07:48 AM

நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பழம்பெரும் நடிகர் மறைந்த எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சதீஷ் (44), சென்னை மேற்கு மாம்பலம் கோல்டன் காலனியில் வசித்து வந்தார்.

தனது தாத்தா எம்.ஆர்.ராதா நடிப்பில் வெளியான ‘ரத்தக்கண்ணீர்’ படத்தின் 2 ம் பாகத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சதீஷ், அவரது நண்பர்கள் சரவணன், பாலு ஆகியோர் படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்வதற்காக குன்றத்தூர் பூந்தண்டலம் கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு பங்களா வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த நீச்சல் குளத்தில் அனைவரும் குளித்தனர். அப்போது சதீஷுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் நீரில் மூழ்கினார்.

அவரை நண்பர்கள் மீட்டு நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சதீஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x