Published : 27 May 2015 07:25 AM
Last Updated : 27 May 2015 07:25 AM

கொத்தனார் கொலையில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 2 பேர் கைது

குன்றத்தூரில் கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை குன்றத்தூர் கொல்லச்சேரி காமராஜர் தெருவை சேர்ந்தவர் தம்பி துரை (22). கடந்த 23-ம் தேதி இவருக் கும் அருகே வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் சுரேஷுக்கும் (32) மோதல் ஏற்பட்டது. அவர்களை விலக்கிவிட தம்பிதுரையின் தந்தையான கொத்தனார் ஆறுமுகம் (50) வந்துள்ளார். சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுமுகத்தின் மார்பில் குத்தினார். இதில் சம்பவ இடத் திலேயே ஆறுமுகம் இறந்தார். தம்பி துரையையும் கத்தியால் குத்திவிட்டு சுரேஷ் தலைமறைவானார். அவரை குன்றத்தூர் போலீஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் கொரட்டூர் பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷ், அவருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பர் ராதாகிருஷ்ணன் (28) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x