

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழககத்தின், காஞ்சி புரம் மண்டலத்தில் பணி புரிந்து ஓய்வுபெற்ற தொழி லாளர்களுக்கு, கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணிக் கொடையும், சேமநல நிதியும் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவை நிதிகளை வழங்கக் கோரி, ஓய்வு பெற்ற போக்கு வரத்து கழக தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் பலராமன் தலைமையில், பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள மாவட்ட போக்குவரத்து தலைமை அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.