Published : 28 Apr 2015 06:10 PM
Last Updated : 28 Apr 2015 06:10 PM

அவதூறு வழக்கு: ஈவிகேஸ் இளங்கோவன் ஜூன் 10-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜூன் 10-ல் நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசநோய் மருத்துவர் அறிவொளி மரணத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு தொடர்பு உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

இதனால். ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது அமைச்சர் விஜய பாஸ்கர் சார்பில் வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ஈவிகேஎஸ் பேச்சு தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது என்று விஜய பாஸ்கர் தன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி ஆதிநாதன் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜூன் 10-ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x